sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற வைக்க உழவர்கரை கூட்டத்தில் தீர்மானம்

/

பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற வைக்க உழவர்கரை கூட்டத்தில் தீர்மானம்

பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற வைக்க உழவர்கரை கூட்டத்தில் தீர்மானம்

பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற வைக்க உழவர்கரை கூட்டத்தில் தீர்மானம்


ADDED : பிப் 10, 2024 06:21 AM

Google News

ADDED : பிப் 10, 2024 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: 'லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது' என, உழவர்கரை மாவட்ட பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி பா.ஜ., உழவர்கரை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஓட்டல் பாண்டி சதர்சன் ரெசிடன்சில் நடந்தது. உழவர்கரை மாவட்ட பா.ஜ., தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். பா.ஜ., மாநில அமைப்பு சாரா பிரிவு தலைவர் சந்துரு வரவேற்றார்.

முன்னாள் மாநிலத் தலைவர் சாமிநாதன், பா.ஜ., மாநில துணைத் தலைவர்கள் முருகன், அகிலன், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், மவுலிதேவன், மாநில செயலாளர் சரவணன், மாநில மகளிரணி தலைவி ஜெயந்தி, உழவர்கரை மாவட்ட பொறுப்பாளர் சரவணகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பா.ஜ., தலைமைக்கு நன்றி தெரிவித்தல், பொங்கல் விழாவின் போது லாஸ்பேட்டை தொகுதி கிருஷ்ணா நகர், அசோக் நகரில் நடந்த கோலப்போட்டிக்கு சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், லாஸ்பேட்டையில் பொங்கல் திருவிழா ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட பொதுச் செயலாளர்கள் பிரகாஷ் (எ) ராஜசேகர், சுரேஷ் கண்ணா ஆகியோர் நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us