ADDED : அக் 19, 2025 11:49 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: அசோக் நகர் ஜீவானந்தம் வீதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது.
லாஸ்பேட்டை தொகுதி அசோக் நகர், ஜீவானந்தம் வீதியில் உழவர்கரை நகராட்சி மூலம் லோக்சபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது.
இப்பணியை, வைத்திலிங்கம் எம்.பி., வைத்திய நாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
ஆணையர் சுரேஷ் ராஜ். நகராட்சி அதிகாரிகள், காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
