/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 13, 2025 03:22 AM

திருபுவனை: செல்லிப்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில், ரூ.18.46 லட்சம் செலவில் சாலை மற்றும் வாய்க்கால் மேம்பாட்டுப் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
திருபுவனை தொகுதி, செல்லிப்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில், ரூ.16.46 லட்சம் செலவில் செல்வ முருகன் நகர் மற்றும் பூந்தோட்ட வீதி மேம்பாட்டு பணி மற்றும் 'எல்' வடிவ வாய்க்கால் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதுச்சேரி, பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் சீனிவாசராம், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.