sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் 'வெறிச்'

/

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் 'வெறிச்'

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் 'வெறிச்'

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் 'வெறிச்'


ADDED : நவ 01, 2024 05:44 AM

Google News

ADDED : நவ 01, 2024 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையொட்டி, புதுச்சேரி முக்கிய சாலைகளில், வாகனகள் மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

புதுச்சேரியில், நாளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையால், ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னலில், போக்குவரத்து நெரிசலில், வாகனங்கள் சிக்கி தவித்து வருகின்றன. வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜ் சாலை, புஸ்சி வீதி, ரெட்டியார்பாளையம், மரப்பாலம், லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட சாலையில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நகரப்பகுதியில், பொருட்கள் வாங்க தினமும் மக்கள் வந்து செல்வதற்குள் பெரும் போராட்டமாகி வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல், போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையொட்டி, மறைமலை அடிகள் சாலை, இ.சி.ஆர். சாலை, கோரிமேடு சாலை உள்ளிட்ட முக்கிய சாலையில், மிகவும் குறைந்த எண்ணிக்கையில், வாகனங்கள் சென்றன.

மக்கள் அதிக அளவில், நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.






      Dinamalar
      Follow us