sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 1.47 லட்சம் 'அபேஸ்'

/

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 1.47 லட்சம் 'அபேஸ்'

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 1.47 லட்சம் 'அபேஸ்'

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 1.47 லட்சம் 'அபேஸ்'


ADDED : டிச 28, 2024 05:31 AM

Google News

ADDED : டிச 28, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ.1.47 லட்சம் இழந்தனர்.

புதுச்சேரி, புதுக்குப்பம், நல்லவாடு அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார். ஆன்லைனில் தங்கும் விடுதியை தேடினார். அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் தங்கும் விடுதியை முன் பதிவு செய்ய பணம் செலுத்த வேண்டுமென தெரிவித்தார்.

இதை நம்பிய விஜய்குமார் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 650 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.

வில்லியனுாரை சேர்ந்த அரவிந்தன் என்பவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடி, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதைநம்பிய அரவிந்தன் 24 ஆயிரத்து 900 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.

இதேபோல், பாகூரை சேர்ந்த கீர்த்தனா 5 ஆயிரம், சிவபிரகாசம் 5 ஆயிரம், முத்தியால்பேட்டை சேர்ந்த உபாகாரமேரி 3 ஆயிரத்து 735 ரூபாய் என, மொத்தம் 5 பேர் 1 லட்சத்து 47 ஆயிரத்து 285 ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us