ADDED : ஏப் 26, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: 2 பேரிடம் 26 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, சாரத்தை சேர்ந்தவர் தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வந்தார். அவரது கார்டு கணக்கில் இருந்து, மர்ம நபர்கள் மோசடியாக ரூ. 23 ஆயிரம் எடுத்து ஏமாற்றியுள்ளனர்.
இதேபோல், வில்லியனுாரை சேர்ந்த பெண் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ரூ. 2 ஆயிரத்து 800க்கு துணி ஆர்டர் செய்து இழந்தார். இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
