sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலி பங்கு சந்தை இணையதளம் மூலம் ரூ. 36 லட்சம் மோசடி

/

போலி பங்கு சந்தை இணையதளம் மூலம் ரூ. 36 லட்சம் மோசடி

போலி பங்கு சந்தை இணையதளம் மூலம் ரூ. 36 லட்சம் மோசடி

போலி பங்கு சந்தை இணையதளம் மூலம் ரூ. 36 லட்சம் மோசடி


ADDED : ஜன 06, 2025 06:58 AM

Google News

ADDED : ஜன 06, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் போலி பங்கு சந்தை இணைய லிங்க் மூலம் வியாபாரியிடம் ரூ. 36 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குமாரவேல்; வியாபாரி.இவரை ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் மர்ம கும்பல் இணைத்தனர். அந்த குழுவில் ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்கும் வழிகள் குறித்து வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

திடீரென மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் குமாரவேலுவை தொடர்பு கொண்டு பகுதி நேர வேலையாக, பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய குமாரவேல் மர்ம நபர் அனுப்பிய லிங்க் மூலம் பணம் செலுத்தி முதலீடு செய்யும் பணியை துவக்கினார்.

பல தவணைகளாக ரூ. 36.45 லட்சம் பணம் செலுத்தி வர்த்தகம் செய்ததில் ரூ. 4 கோடி லாபம் ஈட்டியதுபோல் காட்டியது.

பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்தபோது மேலும் பணம் செலுத்த வேண்டும் என,மர்ம நபர் கூறினார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமாரவேல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதுபோல், ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த சத்யநாராயணனை தொடர்பு கொண்ட மர்ம நபர், உங்களின் மொபைல்போன் குற்ற வழக்கில் தொடர்பில் உள்ளது. வழக்கில் இருந்து மொபைல் போனை நீக்க வேண்டும் என, கூறி, 24 ஆயிரம் ரூபாய் பெற்று ஏமாற்றி உள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த எழிலரசு கடன் செயலி மூலம் கடன் பெற்று திருப்பி செலுத்தியும், கூடுதலாக பணம் கேட்டு எழிலரசுவின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி மர்ம நபர் மிரட்டி உள்ளார். இதனால் 12,600 ரூபாயை மர்ம நபருக்கு அனுப்பிய பின்னரும்,தொடர்ந்து மிரட்டுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதுபோல் நேற்று முன்தினம் மட்டும் குமாரவேல் உட்பட5 நபர்களிடம் 36.83 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளது குறித்து,சைபர் கிரைம் போலீஸ் விசாரித்து வருகிறது.






      Dinamalar
      Follow us