/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரக்பி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
/
ரக்பி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
ADDED : பிப் 17, 2026 05:48 AM

புதுச்சேரி: இந்திய ரக்பி பெடரேஷன் மற்றும் புதுச்சேரி ரக்பி சங்கம் சார்பில் 12 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ரக்பி விளையாட்டு போட்டி ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
சங்கத்தின் செயலாளர் பால ஜனகராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய கராத்தே சங்கத் தலைவர் வளவன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரசுகள் வழங்கி விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி ரக்பி சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சங்கத்தின் மூத்த துணை தலைவர் குமரேசன், பொருளாளர் தேவேந்திரன், துணை தலைவர்கள் நித்யானந்தம், மணிகண்டன், துணை செயலாளர்கள் மோகன், சிவகுமார், சங்க நிர்வாக உறுப்பினர்கள் பாலமுருகன், அமிர்தலட்சுமி மார்ஸ், நேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆச்சாரியா பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி மற்றும் புதுச்சேரி ரக்பி சங்க விளையாட்டு வீரர்கள் செய்திருந்தனர்.

