/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : அக் 26, 2025 11:03 PM

வில்லியனுார்: சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி துணை முதல்வர் மோகன் திறந்துவைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் ௨ வகுப்பு வரையிலான மாணவர்கள் 150க்கும் மேற்பட அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக வேதியியல் விரிவுரையாளர் நாராயணன் மற்றும் பட்டாரி ஆசிரியர் அனுசுயா ஆகியோர் பங்கேற்று சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்து, மாணவர் களுக்கு பரிசுகளை வழங் கினர்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளையும் பள்ளி தலைமை ஆசிரியர், அறிவியல் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்தனர்.

