
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: அரசு உயர்நிலைப் பள்ளியில், நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது.
புதுச்சேரியில், சேக்கிழார் அரசு உயர்நிலைப்பள்ளியில், அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக இணை இயக்குனர் (பெண் கல்வி) சிவராம ரெட்டி கண்காட்சியை துவக்கி துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பழனி தலைமை தாங்கினார்.
நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தயாரித்த அறிவியல், படைப்புகள், கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. பள்ளி, ஆசிரியர்கள், ஐஸ்வர்யா, பிரியா, ரேணுகாதேவி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாகராஜ், உறுப்பினர், முனுசாமி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.