நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த வீராம்பட்டினம், வடக்கு மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அமரன், 45. இவர், நேற்று முன்தினம் இரவு தனது ஸ்கூட்டரை வீட்டு முன், நிறுத்தியிருந்தார்.
நேற்று காலை பார்த்தபோது, ஸ்கூட்டர் காணாமல் போயிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிந்து, ஸ்கூட்டரை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

