ADDED : செப் 06, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உருளையன்பேட்டை, மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் விஜயநாராயணன், 59. இவர், கடந்த மாதம் 31ம் தேதி மாலை புதுச்சேரி – கடலுார் சாலையில் உள்ள தனியார் மால் எதரில் தனக்கு சொந்தமான பி.ஒய்.01.பி.வி. 7773 பதிவு எண் கொண்ட ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு மாலுக்கு சென்றார்.
இரவு 9:15 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது அவரது ஸ்கூட்டி காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
