/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி அருகே கஞ்சா விற்பனை; அரியாங்குப்பத்தில் 4 பேர் கைது
/
பள்ளி அருகே கஞ்சா விற்பனை; அரியாங்குப்பத்தில் 4 பேர் கைது
பள்ளி அருகே கஞ்சா விற்பனை; அரியாங்குப்பத்தில் 4 பேர் கைது
பள்ளி அருகே கஞ்சா விற்பனை; அரியாங்குப்பத்தில் 4 பேர் கைது
ADDED : மார் 08, 2024 06:49 AM

அரியாங்குப்பம் : பள்ளி அருகே கஞ்சா விற்ற நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி - கடலுார் சாலை, நோணாங்குப்பம் அரசு பள்ளி அருகே நின்று கொண்டு கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அரியாங்குப்பத்தை சேர்ந்த விஷ்வா, 20; பி.சி.பி., நகர் புஷ்பராஜ், 18; ேஹமச்சந்திரன், 18; முத்தியால்பேட்டை, சோலை நகர் ஆகாஷ், 25, ஆகியோர் என்பதும், அவர்கள், கஞ்சா பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 250 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள், மூன்று மொபைல் போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தப்பியோடி, முதலியார்பேட்டை விக்கி, ரெட்டியார்பாளையம் கணபதி ஆகியோரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

