ADDED : ஏப் 26, 2026 08:50 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பெண் செக்யூரிட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். செக்யூரிட்டி பணி செய்யும் இவருக்கு, பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவமனையில் ஊழியராக பணி செய்யும் பாரதிதாசன், 36; என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து, பாரதிதாசனை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
