sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மதகடிப்பட்டு சந்திப்பில் பயன்பாட்டிற்கு வந்த சிக்னல்

/

மதகடிப்பட்டு சந்திப்பில் பயன்பாட்டிற்கு வந்த சிக்னல்

மதகடிப்பட்டு சந்திப்பில் பயன்பாட்டிற்கு வந்த சிக்னல்

மதகடிப்பட்டு சந்திப்பில் பயன்பாட்டிற்கு வந்த சிக்னல்


ADDED : பிப் 10, 2025 07:08 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை : மதகடிப்பட்டு மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில் போக்குரவத்து நெரிசலை தடுக்க புதிதாக அமைக்கப்பட்ட சிக்னல், 6 மாதங்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்தது.

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. அலுவலக நாட்களில் காலை, மாலையில் நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசலை தினம் சந்திக்க வேண்டி இருந்ததால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியுற்று வந்தனர்.

இந்நிலையில் மதகடிப்பட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்கு முனை சந்திப்பில் சிக்னல் அமைக்கப்பட்டது.

ஆனாலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிகாட்டப்பட்டது.

அதையடுத்து, 6 மாதங்களுக்குப் பிறகு சிக்னல் விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.






      Dinamalar
      Follow us