sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வலை பின்னும் கூடம் அமைக்க இடம் தேர்வு; அதிகாரிகள் பார்வை

/

 வலை பின்னும் கூடம் அமைக்க இடம் தேர்வு; அதிகாரிகள் பார்வை

 வலை பின்னும் கூடம் அமைக்க இடம் தேர்வு; அதிகாரிகள் பார்வை

 வலை பின்னும் கூடம் அமைக்க இடம் தேர்வு; அதிகாரிகள் பார்வை


ADDED : பிப் 12, 2026 04:44 AM

Google News

ADDED : பிப் 12, 2026 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் மீன் வலை பின்னும் கூடம் அமைக்கும் இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு, ஆலோசனை நடத்தினர்.

வீராம்பட்டினத்தில் மீன் வலை பின்னும் கூடம் இல்லாமல், மீனவர்கள் அவதிப்பட்டனர். வலை பின்னும் கூடம் அமைக்க வேண்டும் என, தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அதையெடுத்து, மீன்வளத்துறை சார்பில், 4 வலை பின்னும் கூடம் கட்டுவதற்கான இடத்தை பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலையில், கவர்னரின் செயலர் மணிக்கண்டன் கடற்கரை பகுதியில் நேற்று பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், வீராம்பட்டினம் மக்கள் குழு தலைவர் விஸ்வநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.

வலை பின்னும் கூடத்தில், கழிப்பறை வசதிகள், வீராம்பட்டினத்தில் மண் அரிப்பை தடுக்க, கருங்கற்கள் கொட்ட வேண்டும். முகத்துவாரம் பகுதியில், மண் அகற்றும், டிரஜ்ஜிங் இயந்திரத்தை நிரந்தரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை அதிகாரிகளிடம் மீனவர்கள் முன்வைத் தனர்.






      Dinamalar
      Follow us