/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுத்துக்கேணி அரசு பள்ளியில் திறன் மேம்பாட்டு விழா
/
சுத்துக்கேணி அரசு பள்ளியில் திறன் மேம்பாட்டு விழா
ADDED : மார் 05, 2024 11:55 PM

திருக்கனுார் : சுத்துக்கேணி அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் திருவரசன் தலைமை தாங்கினார். ஆசிரியை தாரணி வரவேற்றார். ஆசிரியை ராஜேஸ்வரி நோக்கவுரை ஆற்றினார்.
விழாவையொட்டி, மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கையெழுத்து, கணிதவியல், கட்டுரை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் மாநில அளவிலான கோ-கோ மற்றும் ஓட்டப்பந்தியம் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியை சவுமியா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் குமாரவேல், சரவணராஜா, விஜயா, அந்தோணிசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். உடற்கல்வி ஆசிரியர் ஜவகர் பத்மநாபன் நன்றி கூறினார். பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

