/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சூரிய ஒளி மின் நிலைய விழிப்புணர்வு முகாம்
/
சூரிய ஒளி மின் நிலைய விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 02, 2024 02:06 AM
புதுச்சேரி : லாஸ்பேட்டையில் வீட்டு மேற்கூரைகளின் மேல் சூரிய ஒளி மின் நிலையம் நிறுவுவதன் நன்மைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கான விழிப்புணர்வு முகாம் இன்று நடக்கிறது.
புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இணைந்து பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம், வீட்டு மேற்கூரைகளின் மேல் சூரிய ஒளி மின் நிலையம் நிறுவுவதன் நன்மைகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்கும், இத்திட்டத்தில் சேர்ந்து கொள்வதற்காகவும், ஒரு விழிப்புணர்வு முகாம் இன்று நடக்கிறது. இந்த முகாம் லாஸ்பேட்டை, அசோக் நகர், சமுதாய நலக்கூடத்தில், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
முகாமில் பொதுமக்கள் பங்கேற்று திட்டத்தின் பயன்களை அறிந்து கொண்டு பயன் அடையலாம். கூடுதல் விவரங்களுக்கு, 94890-80370, 94890-80374 மற்றும் ee7ped.py.gov.in, என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, புதுச்சேரி மின்துறையின் கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.