ADDED : பிப் 03, 2024 07:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள கால பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி, இரவு 7.00 மணிக்கு கோவிலில் அருள் பாலித்து வரும் கால பைரவருக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாரதனை நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். செந்நிற மலர்கள் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

