/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்
/
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்
ADDED : மார் 30, 2025 03:20 AM
புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி சார்பில், வரி வசூல் சிறப்பு முகாம் மூன்று இடங்களில் இன்று (30ம் தேதி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சி சார்பில், வீடு, சொத்து மற்றும் சேவை வரி செலுத்துவோரின் நலன் கருதி, இன்று (30ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுனாமி குடியிருப்பு அங்கன்வாடி மையம் ஆகியே இரண்டு இடங்களில் வரி வசூல் சிறப்பு முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கணபதிசெட்டிக்குளம், பெரியகாலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, சுனாமி குடியிருப்பு மற்றும் இதர வார்டுகளில் உள்ள சொத்து, வீடு, சேவை மற்றும் குடிநீர் கட்டண வரி நிலுவை தாரர்கள் 2024-25ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு செலுத்தலாம்.
இதேபோல், தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் வீட்டு வரி வசூல் மையத்திலும் இன்று (30ம் தேதி) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வரி வசூல் சிறப்பு முகாம் நடக்கிறது.
இதில், உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ளவர்கள் தங்களது வரி நிலுவை தொகையை செலுத்தி வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், வீடு, சொத்து மற்றும் சேவை வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற முகவரியிலும் மற்றும் டெபிட், கிரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.