/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாட்டு பொங்கல் கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
மாட்டு பொங்கல் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 17, 2026 05:01 AM
திருக்கனுார்: திருக்கனுார் பகுதிகளில் மாட்டு பொங்கலை முன்னிட்டு, மாடுகளை அலங்காரம் செய்து அழைத்து சென்று, கோவில்களில் வழிபாடு நடந்தது.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான நேற்று மாட்டு பொங்கலையொட்டி, மாடுகளை அலங்காரம் செய்து, அப்பகுதி கோவில்களுக்கு அழைத்து சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.
அதன்படி, நேற்று மாட்டு பொங்கலை முன்னிட்டு, திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, வம்புப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை வளர்போர், தங்களது மாடுகளை கழுவி, புதிய கயிறு மற்றும் சலங்கைகளை கட்டி, அலங்காரம் செய்தனர். பின், மாலை 4:00 மணிக்கு மேல் அலங்காரம் செய்த மாடுகளை அப்பகுதியில் கோவில்களுக்கு அழைத்து, சென்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் இருந்து மாடுகள் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது.

