ADDED : நவ 25, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : சந்தை புதுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
ஆசிரியர் கணவா சையது வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆசிரியை ஜெயமாலினி தொகுத்து வழங்கினார்.
இதில், உடற்கல்வி ஆசிரியை ஸ்ரீஜா முன்னிலையில், மாணவர்கள் இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மகாலஷ்மி, அக்பர் ராஜ், சோமசுந்தரம், ராஜசேகர், சுபாஷினி, கலையரசி, அருண் பிரசாத் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.