ADDED : பிப் 19, 2024 04:55 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கம் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
மாநிலத் தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். ராஜ் , பாலு, முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பிரகதீஸ்வரர், சதீஷ், பாலச்சந்தர், செந்தில் வேல், அசோக், வெங்கடாஜலபதி, அடைக்கல சாமி, சுப்ரமணி, சந்தோஷ், கோபி, ரமேஷ், சந்துரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விளையாட்டுத் துறைக்கு தனியாக இயக்குனரை நியமித்தல், வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய உதவித்தொகை, ஊக்கத்தொகை, பயணப்படி, இலவச சீருடைகள், இலவச விளையாட்டு உபகரணங்கள், ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
