ADDED : ஆக 02, 2025 06:47 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில், ஸ்ரீ வாரி பவன் சைவ ஓட்டலை, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரன் திறந்து வைத்தார்.
கடலுார் சாலை முதலியார்பேட்டையில், புதியதாக, ஸ்ரீ வாரி பவன் சைவ ஓட்டல் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில், ஓட்டல் உரிமையாளர் முத்துராமன் வரவேற்றார். ஜெயந்தி முத்துராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, பங்கேற்ற முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரன் ஓட்டலை திறந்து வைத்தார்.
ஓட்டலில், தரமான, சுவை மிகுந்த, சைனீஸ் தந்துாரி, தென்னிந்திய உணவு வகைகள் உடனடியாக வழங்கப்படும் என, உரிமையாளர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், உறவினர்கள், நண்பர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு, உரிமையாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
