/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மளிகை பொருட்களை வழங்காவிட்டால் போராட்டம்; இந்திய கம்யூ., அறிவிப்பு
/
மளிகை பொருட்களை வழங்காவிட்டால் போராட்டம்; இந்திய கம்யூ., அறிவிப்பு
மளிகை பொருட்களை வழங்காவிட்டால் போராட்டம்; இந்திய கம்யூ., அறிவிப்பு
மளிகை பொருட்களை வழங்காவிட்டால் போராட்டம்; இந்திய கம்யூ., அறிவிப்பு
ADDED : நவ 26, 2024 06:41 AM

புதுச்சேரி: இந்திய கம்யூ., தட்டாஞ்சாவடி தொகுதிக் குழு மற்றும் கிளை செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
பாக்கமுடையான்பட்டு காரல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், மாநிலக்குழுவின் அரசியல் முடிவுகள் விவரித்தார்.
தொகுதி செயலாளர் தென்னரசன், மாநில குழு உறுப்பினர்கள் எழிலன், செல்வம் ஆகியோர் தொகுதி குழுவின் பணிகளை பட்டியலிட்டனர்.
தொகுதி பொருளாளர் தனஞ்செழியன், தொகுதி குழு உறுப்பினர்கள் லோகு, ரவிச்சந்திரன், தியாகு, முருகன், ஆரமுது, வெங்கடேசன், கிளைச் செயலாளர்கள் சண்முகம், மாரிமுத்து, சிவகுமார், பிரதீபன், கார்த்திகேயன், செந்தில் கலந்து கொண்டனர். தீபாவளிக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள பத்து வகையான பொருட்கள் கான்பெட் மூலமாக மானிய விலையில் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் 10 வகையான மளிகை தொகுப்புகள் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, இனியும் காலம் கடத்தாமல் உடனடியாக அறிவித்த பொருட்களை வழங்க வேண்டும். இல்லையெனில், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

