sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாண்டி மெரினா கடலில் மூழ்கி மாணவர் பலி; புதுச்சேரியில் தொடரும் சோகம்

/

பாண்டி மெரினா கடலில் மூழ்கி மாணவர் பலி; புதுச்சேரியில் தொடரும் சோகம்

பாண்டி மெரினா கடலில் மூழ்கி மாணவர் பலி; புதுச்சேரியில் தொடரும் சோகம்

பாண்டி மெரினா கடலில் மூழ்கி மாணவர் பலி; புதுச்சேரியில் தொடரும் சோகம்


ADDED : ஜன 22, 2024 12:57 AM

Google News

ADDED : ஜன 22, 2024 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பாண்டி மெரினா கடற்கரை பாறையில் இருந்து தவறி விழுந்த பிளஸ் 1 மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

புதுச்சேரி வேல்ராம்பட்டு , துலுக்கானத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் முருகன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஜெகதீஷ், 16; காந்தி வீதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். தடகள போட்டிக்கு தயாராகி வந்த ஜெகதீஷ் நேற்று காலை 6:30 மணிக்கு, தடகள பயிற்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டார்.

இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் காலையில் பயிற்சிகளை முடித்து கொண்டு தனது நண்பர்கள் 4 பேருடன், காலை 8:45 மணிக்கு மெரினா கடற்கரை சென்றார்.

முகத்துவாரம் அருகே பாறைகள் மீது ஜெகதீஷ், அவரது நண்பர்கள் நின்று செல்பி எடுத்தனர்.

திடீரென எழுந்த ராட்ச அலை அவர்கள் மீது விழுந்தது. அதில், நிலை தடுமாறி ஜெகதீஷ் கடலுக்குள் விழுந்தார். பாறையை பற்றிக் கொண்டு தொங்கிய அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர்.

பாறையில் இருந்து கை நழுவி தண்ணீருக்குள் விழுந்தார். சுழல் நிறைந்த ஆழமான தண்ணீருக்குள் மூழ்கிய ஜெகதீைஷ அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தும், மூச்சுபேச்சின்றி கிடந்தார்.

உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு பரிசோதனை செய்தபோது, அவர், ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதவிர, கோட்டக்குப்பம் தந்திராயன் குப்பம் அருகே நேற்று முன்தினம் ஜெர்மனியைச் சேர்ந்த 77 வயது நபர் கடலில் மூழ்கி இறந்தது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us