/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேஸ் பால் வீரர்களுக்கு சீருடை வழங்கல்
/
பேஸ் பால் வீரர்களுக்கு சீருடை வழங்கல்
ADDED : அக் 04, 2024 03:30 AM

புதுச்சேரி: தேசிய ஜூனியர் பேஸ் பால் போட்டியில் பங்கேற்கும், புதுச்சேரி வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
பஞ்சாப் மாநிலத்தில், 32 வது தேசிய ஜூனியர் பேஸ் பால் போட்டியில், புதுச்சேரி சார்பில் ராகேஷ், சபரிநாதன், ஜீவகன், ஸ்ரீராம், கோகுல், நிகேஷ், சந்தோஷ், சூரியன், சந்துரு, ஸ்ரீகாந்த், பரத், ரிஷி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முத்தரையர் பள்ளி தாளாளர் முத்துராமன், சங்கத் தலைவர் சாரதி, எம்.பி., உதவியாளர் வினோத் சீருடை வழங்கி வாழ்த்தினர்.
தொடர்ந்து, பயிற்சியாளர் பாலாஜி மற்றும் மேலாளர் சிவகுமாருடன் போட்டியில் பங்கேற்க வீரர்கள் புறப்பட்டனர். வழி அனுப்பும் நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் தீனன், சங்க நிர்வாகிகள் பெர்லின், ரவி, ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

