ADDED : மே 02, 2026 01:43 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, வேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
புதுச்சேரி காந்தி வீதியில் பிரசித்திப் பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று மாலை நடந்தது.
விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் காலையில் நடந்தது. மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை உபயதாரர் வக்கீல் முனிசாமி, கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் ஆலய அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
