sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்

/

மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்


ADDED : ஜன 01, 2025 05:40 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று அதிகாலை 4.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கோவில் பூசாரிகளும், பக்தர்களும் தாலாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா தலைமையில் 400க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்திலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக சென்னை, பெங்களூர், வேலுார், கடலுார் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us