sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டி-20 கிரிக்கெட் அரையிறுதி போட்டி போலீஸ் அணி அபார வெற்றி

/

டி-20 கிரிக்கெட் அரையிறுதி போட்டி போலீஸ் அணி அபார வெற்றி

டி-20 கிரிக்கெட் அரையிறுதி போட்டி போலீஸ் அணி அபார வெற்றி

டி-20 கிரிக்கெட் அரையிறுதி போட்டி போலீஸ் அணி அபார வெற்றி


ADDED : பிப் 26, 2024 05:15 AM

Google News

ADDED : பிப் 26, 2024 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும் டி-20, கிரிக்கெட், ஐந்தாவது அரையிறுதி 'லீக்' போட்டியில், போலீஸ் அணி வெற்றி பெற்றது.

புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி அண்ட் அசோசியேஷன் நடத்தும், டி-20 கிரிக்கெட், 'லீக்' கம் 'நாக்- அவுட்' கடந்தாண்டு அக்டோபரில் துவங்கி, நடந்து வருகிறது.

சமீபத்தில் நடந்த, ஐந்தாவது அரையிறுதி 'லீக்' போட்டியில், புதுச்சேரி போலீஸ் மற்றும் அன்னை ராணி கிரிக்கெட் அணிகள் மோதின.

முதலில் களம் இறங்கிய அன்னை ராணி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் தமிழ் 38 பந்துகளில், 6 பவுண்டரிகள் உட்பட, 47 ரன்களை குவித்தார். தினேஷ் 11 பந்துகளில், 2 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன், 20 ரன்களை எடுத்தார். ராஜ், கோவிந்த் மற்றும் மதி தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய புதுச்சேரி போலீஸ் அணி, 13 ஒவர்களில், 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை அதிரடியாக குவித்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், வென்றது. அந்த அணியின் பிரபு 36 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன், 66 ரன், சபரி 30 பந்துகளில், 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன், 54 ரன்களை குவித்தனர். ஸ்ரீதர், 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கமிட்டி சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் ஜில்பர்ட், பார்த்திபன் கணேஷ் அரவிந்த் ஆகியோர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us