ADDED : மே 22, 2026 02:18 AM

புதுச்சேரி: சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி, தாகூர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவிலான சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி மாணவி ஸ்ரீதன்யா தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவிகள் அஷ்தா, நிஷா, சஷ்மிதா ஆகியோர் 498 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவிகள் சியாமளாதேவி, தர்ஷினி, பிரகல்யா, ஸ்ரீமதி, சுபாஷினி ஆகியோர் 496 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பாடவாரியாக ஆங்கிலத்தில் 4 பேர், கணிதத்தில் 8, அறிவியலில் 69, சமூக அறிவியலில் 14 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை மாணவர்களை தாகூர் கல்வி குழுமத்தின் தலைவர் முத்துசாமி, செயலர் மணிகண்டன், பொருளாளர் காளியண்ணன், இணை செயலர் அருண்குமார், கல்வி குழு இயக்குனர்கள் சண்முகம், செல்வம், ராஜமாணிக்கம், சிலம்பரசன், பள்ளியின் முதல்வர் சரவணன் மற்றும் பொறுப்பாசிரியர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர்.
