ADDED : மார் 28, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:சட்டசபை தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி கலால்துறையினர் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி மடுரையில் இருந்து காரைக்காலிற்கு பர்மிட்டுடன் மதுபானம் ஏற்றி சென்ற 3 லாரிகளை கலால்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பர்மீட்டில் உள்ளபடி மதுபானங்கள் உள்ளதா, மது பாட்டில்களில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள் உள்ளிட்டவை சரியான அளவில் இருக்கிறதா என்பதை கலால் தாசில்தார்கள் ராஜேஷ் கண்ணா, ரவிச்சந்திரன் ஆகியோர் சோதனையிட்டனர். சோதனைக்குப் பிறகு 3 லாரிகளும் செல்ல அனுமதிக்கப்பட்டது.
