நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: டாடா ஏஸ் திருடு போனது குறித்து உருளையன்பேட்டைபோலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருவடிக்குப்பம், ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் பாலு, 55. இவர், பி.ஒய்.01.பி.இ.7252 என்ற பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வாகனத்தை வைத்து லோடு வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல், காமராஜ் சாலையில் உள்ள தனியார் உணவகம் அருகில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி நேற்று காலை வந்து பார்த்தபோது, நிறுத்திய இடத்தில் வாகனத்தை காணவில்லை.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலு அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

