/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் முகாம்
/
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் முகாம்
ADDED : பிப் 09, 2025 06:11 AM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில், வீட்டு வரி உள்ளிட்ட வரி வசூல் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
இதுகுறித்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
உழவர்கரை நகராட்சி சார்பில், வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி வசூல் சிறப்பு முகாம், ரெயின்போ நகர், சத்யா சிறப்பு பள்ளியில், இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், எழில் நகர், வசந்த் நகர், செந்தாமரை நகர் மற்றும் இதர வார்டுகளில் உள்ள நிலுவைதாரர்கள் 2024-25ம் ஆண்டிற்கான வரிகளை செலுத்தலாம்.
அதே போல, தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகர், வீட்டு வரி வசூல் மையத்தில், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ளவர்கள் வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி நிலுவை தாரர்கள் 2024-25ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு செலுத்தி,வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்த்து கொள்ள வேண்டும்.
மேலும், வரிகளை, ஆன்லைன் மூலம், igrams.py.gov.in என்ற முகவரியிலும், டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.