/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை நகராட்சியில் வரி வசூல் முகாம்
/
உழவர்கரை நகராட்சியில் வரி வசூல் முகாம்
ADDED : பிப் 18, 2024 05:07 AM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில்,வரி வசூல் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்துவோரின் நலன் கருதி, இன்று 18 ம் தேதி வரி வசூல் சிறப்பு முகாம், அரும்பார்த்தபுரம், திருக்குறளார் நகர் புளூ ஸ்டார்ஸ் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரும்பார்த்தபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இதர வார்டுகளில் உள்ள சொத்து வரி, சேவை வரி மற்றும் குடிநீர் கட்டண நிலுவைதாரர்கள் 2023--- 2024ம் ஆண்டு வரையிலான வரியை செலுத்தலாம்.
மேலும் வீட்டுவரி, சொத்துவரி மற்றும் சேவை வரி செலுத்துவோரின் நலன் கருதி, இன்று வி.வி.பி. நகர் வீட்டு வரி வசூல் மையம், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை இயங்கும். உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி நிலுவைத்தாரர்கள் 2023--24ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்தி வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட வரிகளை lgrams.py.gov.in என்ற ஆன்லைன் மூலமும், டெபிட், கிரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம்.