sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உழவர்கரை நகராட்சியில் வரி வசூல் முகாம்

/

உழவர்கரை நகராட்சியில் வரி வசூல் முகாம்

உழவர்கரை நகராட்சியில் வரி வசூல் முகாம்

உழவர்கரை நகராட்சியில் வரி வசூல் முகாம்


ADDED : பிப் 18, 2024 05:07 AM

Google News

ADDED : பிப் 18, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில்,வரி வசூல் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:

உழவர்கரை நகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்துவோரின் நலன் கருதி, இன்று 18 ம் தேதி வரி வசூல் சிறப்பு முகாம், அரும்பார்த்தபுரம், திருக்குறளார் நகர் புளூ ஸ்டார்ஸ் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரும்பார்த்தபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இதர வார்டுகளில் உள்ள சொத்து வரி, சேவை வரி மற்றும் குடிநீர் கட்டண நிலுவைதாரர்கள் 2023--- 2024ம் ஆண்டு வரையிலான வரியை செலுத்தலாம்.

மேலும் வீட்டுவரி, சொத்துவரி மற்றும் சேவை வரி செலுத்துவோரின் நலன் கருதி, இன்று வி.வி.பி. நகர் வீட்டு வரி வசூல் மையம், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை இயங்கும். உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி நிலுவைத்தாரர்கள் 2023--24ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்தி வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட வரிகளை lgrams.py.gov.in என்ற ஆன்லைன் மூலமும், டெபிட், கிரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம்.






      Dinamalar
      Follow us