sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உழவர்கரை நகராட்சியில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்

/

உழவர்கரை நகராட்சியில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்

உழவர்கரை நகராட்சியில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்

உழவர்கரை நகராட்சியில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்


ADDED : ஜன 06, 2024 06:16 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : உழவர்கரை நகராட்சி சார்பில் நடக்கும் வீட்டு வரி, சொத்துவரி, சேவை வரி வசூல் சிறப்பு முகாமில் பங்கேற்று வரி மற்றும் நிலுவை வரியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உழவர்கரை நகராட்சி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உழவர்கரை நகராட்சி சார்பில், வரி செலுத்துவோரின் நலன் கருதி, நாளை( 7ம் தேதி) வெங்கட்டா நகரில் அமைந்துள்ள, தமிழ்ச்சங்கத்தில், சொத்து வரி மற்றும் சேவை வரி வசூல் சிறப்பு முகாம், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி காமராஜர் நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், பிருந்தாவனம், சாரம் மற்றும் இதர வார்டுகளில் உள்ள வரி நிலுவைதாரர்கள், 2023 - 24ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரியை செலுத்தலாம்.

மேலும் இன்று வி.வி.பி நகர் வீட்டு வரி வசூல் மையத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாமில் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட, அனைத்து வார்டுகளில் உள்ளவர்கள், வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள், 2023-24ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு செலுத்தி, வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in எனும் முகவரியில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us