/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர்கள் போலீசார் தள்ளு முள்ளு
/
ஆசிரியர்கள் போலீசார் தள்ளு முள்ளு
ADDED : ஜன 30, 2026 05:21 AM
புதுச்சேரி: பணி நிரந்தம் செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறையில் கவுரவ விரிவுரையாளர்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி மொழி ஆசிரியர்கள், கவுரவ பாலசேவிகாக்கள் என 250க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் தங்களை பணிநிரந்தம் கோரி கடந்த 21ம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆசிரியர்கள் பணிகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள், நிரந்தர ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தியபோது லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

