/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிரான்ஸ்பர் ஆர்டரை கேன்சல் செய்ய சட்டசபையை வலம் வரும் ஆசிரியர்கள்
/
டிரான்ஸ்பர் ஆர்டரை கேன்சல் செய்ய சட்டசபையை வலம் வரும் ஆசிரியர்கள்
டிரான்ஸ்பர் ஆர்டரை கேன்சல் செய்ய சட்டசபையை வலம் வரும் ஆசிரியர்கள்
டிரான்ஸ்பர் ஆர்டரை கேன்சல் செய்ய சட்டசபையை வலம் வரும் ஆசிரியர்கள்
ADDED : அக் 05, 2025 03:10 AM
பள்ளிக் கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அண்மையில் அடுத்தடுத்து பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக புதிய பள்ளிகளில் சேர்ந்தனர். இதன் காரணமாக ஏற்கனவே அவர்கள் பணியாற்றிய பல்வேறு நகர அரசு பள்ளிகளில் தற்போது முக்கிய பாட பிரிவுகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பொதுத்தேர்வு நெருங்குகிறது. இந்த ஆசிரியர் பணிடங்களை நிரப்ப வேண்டும் என, அந்தந்த நகர பள்ளி முதல்வர்கள் பள்ளி கல்வித் துறையிடம் முறையிட்டு இருந்தனர்.பள்ளி கல்வித் துறையும் நகர பகுதியில் கூடுதலாக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் இருந்து இடமாற்றம் செய்து ஆர்டரும் போட்டது.
ஆனால் இந்த இடமாற்றல் உத்தரவை யாரும் மதிப்பதே இல்லை. இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் புதிய பள்ளியில் சேராமல், சட்டசபையை சுற்றி சுற்றி வருகின்றனர்.அப்படியே அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை பிடித்து, இடமாற்றல் உத்தரவை 'கேன்சல்' செய்துவிட்டு, ஹாயாக பழைய பள்ளிகளில் மீண்டும் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாமல் நகர பள்ளிகள் இப்போது கடும் நெருக்கடியில் உள்ளன.ஆசிரியர்கள் பதவி உயர்வினால் ஏற்பட்ட காலியிடங்களால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான், கூடுதல் ஆசிரியர்கள் இடம்மாற்றம் செய்யப்படுகின்றனர்.
அப்படி இருக்கின்றபோது,எதற்காக இந்த இடமாற்றம் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இதன் மர்மம் என்ன... பள்ளி கல்வி துறையின் இட மாற்றல் உத்தரவிற்கு மதிப்பு இல்லையா.. அரசியல் அழுத்தங்களுக்கு பயந்து பள்ளி கல்வி துறை தனது உத்தரவை திரும்ப பெற வேண்டுமா. சிபாரிசு இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் பள்ளி கல்வி துறையில் செய்யலாமா...
இப்படியே ஒவ்வொரும் அரசியல்வாதிகளின் பின்னால் ஒளிந்து கொண்டால்,ஒரு ஆசிரியரை கூட எதிர்காலத்தில் பள்ளி கல்வித் துறையால் இடமாற்றம் செய்ய முடியாது; காலியிடங்களை நிரப்ப முடியாது. மாணவர்களின் கல்வி தான் பாதிக்கப்படும் என, ஆதங்கத்தில் பள்ளி முதல்வர்கள் சராமரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விஷயத்தில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உறுதியான நடவடிக்கையை எதிர்பார்க்கின்றனர்.