/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்
/
ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்
ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்
ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்
UPDATED : நவ 27, 2024 09:15 AM
ADDED : நவ 27, 2024 06:46 AM

புதுச்சேரி : 'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழாவில், சிறப்பு விருந்தினர் சேலம் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் டீன் செந்தில்குமார் பேசியதாவது:
உலகம் வேகமாக மாறி வருகின்றது. இன்றைய மாணவர்கள் சோஷியல் மீடியாவில் 'அப்டேட்'டாக உள்ளனர். படிப்பிற்காகவும் பார்க்கின்றனர். அதன் வாயிலாக பாடத்தை தவிர்த்து மற்ற விஷயங்களையும் விரல் நுனியில் தெரிந்து வைத்துள்ளனர். அதற்கேற்ப ஆசிரியர்களும், தங்களை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும்.
நேரடியாக பாடங்களை நடத்தும்போது, மாணவர்கள் கவனம் செலுத்துவதில்லை. சோஷியல் மீடியாவில் டிரெண்ட் ஆன விஷயங்களை பாடம் போதிப்பதற்கு முன் சில நிமிடங்கள் மாணவர்களிடம் கலந்துரையாடினாலே போதும். அவர்களின் கவனத்தை ஈர்த்து, பாடம் ஈசியாக நடத்த முடியும்.
மாணவர்களுக்கு கம்யூனிகேஷன் ஸ்கில், டீம் ஒர்க், வேலைக்கான திறன் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். இது ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 'ரோல் மாடல்' ஆக இருக்க வேண்டும். நம்மை மாணவர்கள் தினமும் பார்க்கின்றனர். நமது பழக்க, வழக்கங்களை கூர்ந்து கவனிக்கின்றனர். எனவே, ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்கின்றனரோ, அதையேதான் மாணவர்கள், பெற்றோரிடமும், உங்களிடமும் பிரதிபலிக்கின்றனர்.
பள்ளியில் மட்டுமின்றி வீட்டிலும் பணிச்சுமை என்பதால், ஆசிரியர்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனால் பள்ளியில் சிறிது ஓய்வு நேரம் கிடைக்கும்போது மொபைல்போன் பார்க்கின்றனர்.
அது போன்ற நேரங்களில் மாணவர்களிடம் குடும்ப சூழ்நிலையை கேட்டறியலாம். மாணவர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் உள்ளனர்; அவர்களுக்கு எப்படிப்பட்ட உதவி தேவைப்படுகிறது என்பதை ஆராய்ந்து, அவர்களுக்கு வழிகாட்டலாம். பள்ளிகளில் கல்வியை தாண்டிய உணர்வுபூர்வமான ஆதரவு மாணவர்களுக்கு தேவைப்படுகிறது. இது ஆசிரியர்களால் மட்டுமே தர முடியும். சிறிய துாண்டுதல், ஊக்கம் கூட மாணவர்களின் எதிர்கால வாழ்வை வளமாக மாற்றிவிடும். அதற்கு நானே உதாரணம். எனவே வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்வுப்பூர்வமான ஆதரவை கொடுக்க வேண்டும்.
கொரோனா தாக்கம் கல்வி உலகை புரட்டிப்போட்டது. வகுப்பறைகள் அனைத்தும் ஆன்லைனில் சென்றது. அப்போது நிறைய பேர் ஆன்லைனில் வகுப்பு எடுக்க கஷ்டப்பட்டனர். எனவே தொழில்நுட்ப ரீதியாகவும் ஆசிரியர்கள் அப்டேட்டாக இருப்பதும் முக்கியம். இது மாணவர்களுக்கு உதவுவதுடன் உங்கள் உயர்வுக்கும் வழி வகுக்கும். திறன், மறுதிறன், மேம்பாடு உள்ளிட்ட மூன்று விஷயங்களிலும் ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.