ADDED : செப் 08, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழாவில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா மற்றும் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் நேரு நகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வேளாண் அமைச்சர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம்,விக்னேஷ்வரன்,மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தனர்.பின்னர்
சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
