ADDED : அக் 29, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேதாரப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் 26, இவர் நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு சேதாரப்பட்டு நான்கு முனை சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பெணகள், பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த சேதாரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அவர் தொடர்ந்து பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்டதால் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.