ADDED : மார் 16, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுார் அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வில்லியனுார் போலீஸ் சரக பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் மாலை சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் ஓதியம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் தனியார் பள்ளி அருகே நின்றிருந்த வாலிபரை போலீசார் பிடித்த விசாரித்தனர்.
இதில் வில்லியனுார் கோட்டைமேடு நடுத்தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் முகிலன்,25; என தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள 57 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர், போலீசார் முகிலன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

