ADDED : ஜன 07, 2025 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: ஆன்லைன் மூலம் கேம் விளையாடி மனமுடைந்த வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம் அடுத்த மணவெளி தேர் மூட்டி வீதியை சேர்ந்தவர் முருகன்.
இவரது மகன் சத்தியபாபு, 29, இவர், ஆன்லைனில், மொபைலில், நண்பர்களுடன் கேம் விளையாடி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்,அவர் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டுக் கொண்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை, மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.