/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தெலுங்கானா - புதுச்சேரி கவர்னர்கள் சந்திப்பு
/
தெலுங்கானா - புதுச்சேரி கவர்னர்கள் சந்திப்பு
ADDED : ஜூலை 14, 2025 03:48 AM

புதுச்சேரி : தெலுங்கானா கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா, புதுச்சேரி கவர்னர் கைலாஷ் நாதனை மரியாதை நிமித்தமான சந்தித்து பேசினார்.
தெலுங்கானா மாநில கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா, தமிழகத்திற்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ளார்.
இவர், நேற்று நெய்வேலி யில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுச்சேரி வழியாக சென்றார்.
இதனிடையே, அவர், புதுச்சேரி கவர்னர் கைலாஷ் நாதனை, அவரது மாளிகைக்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அவருக்கு, கவர்னர் கைலாஷ்நாதன் பூச்செண்டு அளித்து வரவேற்றார்.
சந்திப்பின்போது, புதுச்சேரியின் வரலாறு, பண்பாடு, புதுச்சேரியில் சுற்று லாவை மேம்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.