ADDED : ஏப் 09, 2026 05:23 AM
புதுச்சேரி: சென்னையில் இருந்து சுற்றுலா வந்த வாலிபர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது வீட்டில் தென்காசி மாவட்டம் தேவன் குளம் பகுதியை சேர்ந்த கண்ணன், 19; என்பவர் வேலை பார்த்து வந்தார். துரை பாண்டி தனது உறவினர்கள் மற்றும் கண்ணன் ஆகியோருடன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.
லாஸ்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இரவு ஓவராக மது குடித்து, போதையில் இருந்த கண்ணன், சாப்பிட்ட குப்பையை ஜன்னல் வழியாக துாக்கி போடும் போது, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவரை, புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
