/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாய் சேய் நல்வாழ்வு மையம்: முதல்வர் திறந்து வைப்பு
/
தாய் சேய் நல்வாழ்வு மையம்: முதல்வர் திறந்து வைப்பு
தாய் சேய் நல்வாழ்வு மையம்: முதல்வர் திறந்து வைப்பு
தாய் சேய் நல்வாழ்வு மையம்: முதல்வர் திறந்து வைப்பு
ADDED : பிப் 09, 2024 05:34 AM

அரியாங்குப்பம்: தேங்காய்த்திட்டில் புதிய தாய் சேய் துணை நல்வாழ்வு மையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
அரியாங்குப்பம் தொகுதி, தேங்காய்த்திட்டில் 49 ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட தாய் சேய் துணை நல்வாழ்வு மையக் கட்டடம் திறப்பு விழா நடந்தது. முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து, பேசினார்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.
அதே போல, மணவெளி தொகுதி, தவளக்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையம் பகுதியில் 45 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட தாய் சேய் துணை நல்வாழ்வு மையக் கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இரு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, தலைமை பொறியாளர் வீரசெல்வன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் முரளி, சுகாதாரத் துறை அதிகாரிகள், டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

