/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளிகளில் அறக்கட்டளை தஞ்சை பல்கலை துணைவேந்தர் விருப்பம்
/
அரசு பள்ளிகளில் அறக்கட்டளை தஞ்சை பல்கலை துணைவேந்தர் விருப்பம்
அரசு பள்ளிகளில் அறக்கட்டளை தஞ்சை பல்கலை துணைவேந்தர் விருப்பம்
அரசு பள்ளிகளில் அறக்கட்டளை தஞ்சை பல்கலை துணைவேந்தர் விருப்பம்
ADDED : நவ 21, 2024 05:35 AM

திருக்கனுார்: சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முனுசாமி - மரகதம் கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் மோகன் தலைமை தாங்கினார்.
விழாவில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தரும், இப் பள்ளியின் முன்னாள் மாணவருமான திருவள்ளுவன், 'முனுசாமி மரகதம் பெயரில் கல்வி அறக்கட்டளை துவங்குவதற்கு, ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இப்பள்ளியில் கடந்த 1968ம் ஆண்டு 1ம் வகுப்பு சேர்ந்து 8 ம் வகுப்புவரை படித்தேன்.
பின்னர், அண்ணாமலை பல்கலையில் பட்ட மேற்படிப்பு படித்து விட்டு, அங்கேயே 32 ஆண்டுகள் பணியாற்றி, கடந்த 2021ம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
படித்த பள்ளிக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக, தற்போது அறக்கட்டளை துவங்க நிதியுதவி வழங்கினேன். இதன் மூலம் வரும் நிதியை கொண்டு, பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இதேபோல் 9 முதல் 12ம் வகுப்பு வரை படித்த கண்டமங்கலம் அரசு பள்ளியிலும் அறக்கட்டளை துவங்க உள்ளேன்.
அறக்கட்டளை துவங்குவதால், மாணவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்க முடியும். ஆகையால், அரசு ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளில் அறக்கட்டளைகளை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து, அறிவியல் கண்காட்சி, கட்டுரை போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை ஆசிரியர் மாணிக்கவேலு தொகுத்து வழங்கினார். ஆசிரியர் லட்சுமி நன்றி கூறினார்.