sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இன்று 79வது சுதந்திர தின விழா முதல்வர் தேசிய கொடி ஏற்றுகிறார்

/

இன்று 79வது சுதந்திர தின விழா முதல்வர் தேசிய கொடி ஏற்றுகிறார்

இன்று 79வது சுதந்திர தின விழா முதல்வர் தேசிய கொடி ஏற்றுகிறார்

இன்று 79வது சுதந்திர தின விழா முதல்வர் தேசிய கொடி ஏற்றுகிறார்


ADDED : ஆக 14, 2025 11:55 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், கடற்கரை சாலையில் இன்று காலை நடைபெறும் சுதந்தி ர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, சிறந்த போலீஸ் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்குகிறார்.

நாட்டின் 79வது சுதந்திர தினவிழாவை இன்று புதுச்சேரி அரசு சார்பில், நான்கு பிராந்தியங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெறும் விழாவில், காலை 9:05 மணிக்கு முதல்வர் ரங்கசாமியை, தலைமை செயலர் சரத் சவுகான் விழா மேடைக்கு அழைத்து செல்கிறார்.

அங்கு போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசியகீதம் இசைக்க, முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின், போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்கிறார். தொடர்ந்து சுதந்திர தின விழா உரையாற்றுகிறார்.

பின், சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய துறைகளுக்கு விருது, சமூக சேவகர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார்.

தொடர்ந்து, மேடையில் இருந்தபடி போலீஸ், ஊர் காவல்படை, தீயணைப்பு துறை, முன்னாள் ராணுவ வீரர்கள், என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., சாரணர் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதேபோன்று காரைக்காலில் நடைபெறும் விழாவில் அமைச்சர் திருமுருகன், ஏனாமில் அமைச்சர் லட்சுமிநாராயணன், மாகி யில் அமைச்சர் ஜான்குமார் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கின்றனர்.






      Dinamalar
      Follow us