ADDED : பிப் 07, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் அருட்பிரகாச வள்ளலார் மணி மாடத்தில் திருவருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் உள்ள விஸ்வநாதர் சித்தர் மடத்தில் அமைந்துள்ள, அருட்பிரகாச வள்ளலார் மணி மாடத்தில் 154ம் ஆண்டு தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு திருவருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
இதையொட்டி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திருவருட்பா முற்றோதல் 6 ஆயிரம் பாடல் பாடப்பட்டது. 11ம் தேதி காலை 7 மணிக்கு தைப்பூச ஜோதி தரிசனம் நடக்கிறது.
தைப்பூசத்ததையொட்டி வரும் 10ம் தேதி வரை திருவருட்பா 6 ஆயிரம் பாடல் பாடப்படுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்னர்.

