/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்
/
விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்
ADDED : டிச 13, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: வயலில் வேலை செய்த விவசாயி, மயங்கி விழுந்து இறந்தார்.
ரெட்டிச்சாவடி அடுத்த கரிக்கன் நகரை சேர்ந்தவர் வீரப்பன், 56, விவசாய வேலை செய்து வருகிறார். இவர், அபிேஷகப்பாக்கம் சித்தரஞ்சன் தாஸ் என்பவரது வயலில், நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த, மற்ற தொழிலாளிகள் அவரை, அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு ஏற்னவே நீரிழிவு நோய் இருந்துள்ளது.
இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.